பாரிஸ், ஜூலை 2 - பிரான்ஸ் நாடு முழுவதும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அந்நாடு தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகள் அதிகரித்து வரும் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி பாரிஸ் மற்றும் 15 பிற பிரெஞ்சு பிராந்தியங்கள் சிவப்பு எச்சரிக்கையில் உள்ளன. அதே நேரத்தில் 68 பிராந்தியங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையில் இருந்தன.
ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, பிரான்சின் 96 பிராந்தியங்களில் 84 பிராந்தியங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் இருந்தன.
ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் குரோஷியா உள்ளிட்ட நாடுகளிலும் வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகியவை வெப்பமான நிலையை பதிவு செய்தன.
ஜூன் 28 அன்று அண்டலூசியாவில் உள்ள எல் கிரனாடோவில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதே நேரத்தில் ஜூன் 29 அன்று மத்திய போர்த்துகீசிய நகரமான மோராவில் 46.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
பெரும்பாலான நாடுகள் அவசர மருத்துவ சேவைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன. மேலும் மோசமான வானிலை தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டனர்.
ஐரோப்பாவின் சில பகுதிகளை ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் வெப்ப அலை காரணமாக பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இவ்வாரத்தின் மத்தியில் வெப்பம் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


