NATIONAL

நிலுவையில் சம்மன்களைக் கொண்டுள்ள பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

1 ஜூலை 2025, 2:40 PM
நிலுவையில் சம்மன்களைக் கொண்டுள்ள பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

கோத்தா பாரு, ஜூலை 1 - ஜூலை 8 ஆம் தேதி காலக்கெடுவிற்குப் பிறகு நிலுவையில் உள்ள சம்மன்களை செலுத்தத் தவறும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மீது சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) நடவடிக்கை எடுக்கும்.

மேலும், காலக்கெடுவிற்குப் பிறகு நிலுவையில் உள்ள சம்மன்களை கொண்டுள்ள வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் மற்றும் சாலையில் அவற்றை ஓட்ட தடை விதிக்கப்படும் என JPJ இயக்குநர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லி கூறினார்.

"நிலுவையில் உள்ள சம்மன்களைத் தீர்க்கத் தவறிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க JPJ குழு தயாராக இருக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்றார்.

"கடந்த வெள்ளிக்கிழமை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இது குறித்து அறிவித்த பிறகு, இதுவரை, பல நிறுவன ஆபரேட்டர்கள் சம்மன்களை செலுத்த முன்வரத் தொடங்கியுள்ளனர்.

"வழங்கப்பட்ட சம்மன்களின் அளவு அவர்கள் பெற்ற தகவல்களுடன் ஒத்துப்போகவில்லை என்று எந்த நிறுவனமும் கருதினால், அவர்கள் அருகிலுள்ள JPJ அலுவலகத்திற்கு வரலாம் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.