கோலாலம்பூர் ஜூன் 28;- அமெரிக்க ஓபன் பேட்மிண்டனில் கே. லெட்ஷனாவின் துணிச்சலான முன்னேற்றம் வெள்ளிக்கிழமை அயோவாவில் நடந்த காலிறுதிப் போட்டியில் முடிவுக்கு வந்தது.
உலகின் தரவரிசையில் இந்தியாவின் முதல் தர விளையாட்டாளர் தன்வி ஷர்மாவின் ஆட்டத்தை எதிர்த்து மலேசியாவின் கே. லெட்ஷனாவினால் (தர வரிசையில் 50) ஆட்டத்தரத்தை உயர்த்த முடியவில்லை. தன்வி ஷர்மா 33 நிமிடங்களில் 21-13,21-16 என்ற செட் கணக்கில் கே. லெட்ஷனா தோற்கடித்தார்.
லெட்ஷனா இதற்கு முன்பு கடைசி நான்கு இடங்களுக்கு செல்லும் வழியில் ஜப்பானிய 2017 உலக சாம்பியனான நோசோமி ஒகுஹாராவையும், இந்தியாவின் வீராங்கனையான ஆகாஷி காஷ்யாவையும் வீழ்த்தினார்.
தேசிய ஒற்றையர் பயிற்சியாளர் கே. யோகேந்திரன் கூறுகையில், லெட்ஷனா இன்னும் சீராக விளையாட வேண்டும் என்றார். கடந்த மாதம் தைவான் ஓபனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அவர் வெளியேறிய இரண்டாவது காலிறுதி இதுவாகும்.
ஒட்டுமொத்தமாக, அதிக தரவரிசை கொண்ட வீரர்களை வீழ்த்தியதற்கான பாராட்டுக்கு அவர் தகுதியானவர், ஆனால் தனது அடுத்த போட்டியில் (கனடா ஓபன்) முன்னேற அவர் இதற்குப் பிறகு அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
16 வயதான இந்தியாவின் தன்வி ஷர்மா , வியட்நாமின் இரண்டாவது நிலை வீரர் நுயென் துய் லின் மற்றும் தைவானில் தைவான் ஓபன் ரன்னர்-அப் தாய்லாந்தின் பிச்சமன் ஒபத்னிபுத்தை அயோவாவில் முன்பு தோற்கடித்தார்.


