MEDIA STATEMENT

உலகளாவிய அரசியல் நிலைமை பெரிய சவாலானதாகி வருகிறது, மலேசிய ராணுவம் சமீபத்திய தொழில்நுட்பத்தை பெற்றிருக்க வேண்டும்- மாமன்னர்.

28 ஜூன் 2025, 2:34 PM
உலகளாவிய அரசியல் நிலைமை பெரிய சவாலானதாகி வருகிறது, மலேசிய ராணுவம் சமீபத்திய தொழில்நுட்பத்தை பெற்றிருக்க வேண்டும்- மாமன்னர்.

கோலாலம்பூர் ஜூன் 28; இப்பொழுது அதிகரித்து வரும் சவாலான மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய அரசியல் நிலைக்கு ஏற்ப நிலைமையை சமாளிக்க மலேசிய ஆயுதப்படைகள் (ஏடிஎம்) எப்போதும் தயாராக இருக்க வேண்டும் மற்றும் எந்த ஒரு நிகழ்வையும் எதிர்கொள்ள சமீபத்திய பாதுகாப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் மாமன்னர்.

யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர், காசாவில் நீடித்த மோதலும், சர்வதேச சட்டத்தால் உலக அமைதியை பராமரிக்க முடியவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்று கூறினார்.

"எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள மலேசிய ஆயுதப் படைகள் எப்போதும் தயாராக இருப்பதும், சமீபத்திய பாதுகாப்பு தொழில் நுட்பத்துடன் பொருத்தப் பட்டு இருப்பதும் முக்கியம்". இதற்குக் காரணம், நமது நண்பர்கள் யார், நமது எதிரிகள் யார் என்று நமக்குத் தெரியாது "என்று மாட்சிமை தங்கிய மன்னர் கூறினார்.

இங்குள்ள சுங்கை பீசியில் உள்ள கேம்ப் பிரீமியரில் மலேசிய ஆயுதப்படை கேடட் அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் நியமன விழாவின் போது மேன்மைமிகு மாமன்னர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அதே நேரத்தில், உபகரணங்களுக்கான அனைத்து கொள்முதல் செயல் முறைகளிலும் சப்ளையர் நிறுவனங்களின் அரசியல் தலையீடு அல்லது செல்வாக்கு இல்லை என்பதை உறுதி செய்யுமாறு சுல்தான் இப்ராஹிம் அரசாங்கத்திற்கு நினைவூட்டினார்.

"ஏடிஎம்மின் தலைமை எப்போதும் நம்பகமானதாக இருக்க வேண்டும், எந்த ஒரு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது". ஏடிஎம்மின் தலைமைத் தளபதியாக, தனிப்பட்ட லாபத்திற்காக தங்கள் பதவியைப் பயன்படுத்தும் எவரையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் "என்று யாங் டி-பெர்துவான் அகோங் கூறினார்.

கூடுதலாக, சுல்தான் இப்ராஹிம் இராணுவ வீரர்களிடையே சமூக ஊடகங்களை பயன்படுத்தும் கலாச்சாரத்தை கண்டித்தார், மேலும் எல்லாவற்றையும், குறிப்பாக அணியின் செயல்பாடு இடங்கள் மற்றும் அணி தொடர்பான பிற முக்கியமான தகவல்கள் தொடர்பான தகவல்களைப் பதிவேற்ற வேண்டாம் என்று அவர்களுக்கு நினைவூட்டினார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர், இரு தரப்பினரும் பொது தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்மார்ட் பயன்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு எளிதில் தாக்குதல்களை நடத்த பயன்படுத்தினார்கள் என்பதை காட்டுகிறது.

இதற்கிடையில், இன்று தங்கள் பயிற்சியை முடித்த 509 கேடட் (பயிற்சி முடித்த இளம்) அதிகாரிகளை சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார், மேலும் ஒரு இராணுவ அதிகாரியாக தொழிலில் உயர்ந்த தியாகங்கள், சுய ஒழுக்கம், நேர்மை மற்றும் மன்னருக்கும் நாட்டிற்கும் அசைக்க முடியாத விசுவாசம் ஆகியவற்றைக் கோருகிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் நோர்டின், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முகமது நிஜாம் ஜாஃபர், ராணுவத் தலைவர் ஜெனரல் டான் ஸ்ரீ முகமது ஹபீசுதீன் ஜந்தன், கடற்படைத் தலைவர் அட்மிரல் டான் ஸ்ரீ டாக்டர் சுல்ஹெல்மி இந்தான் மற்றும் விமானப்படை தளபதிகள் ஜெனரல் டத்தோ முகமது நோராஸ்லான் அரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.