NATIONAL

அரசியல் ஈடுபாட்டை ஐ.ஜி.பி. மறுத்தார்- உண்மைச் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு அறிவுறுத்து

23 ஜூன் 2025, 5:00 PM
அரசியல் ஈடுபாட்டை ஐ.ஜி.பி. மறுத்தார்- உண்மைச் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு அறிவுறுத்து

புத்ராஜெயா, ஜூன் 23 - புதிய   கிட்டத்தட்ட நாற்பது ஆண்ட கால அரச மலேசிய போலீஸ் படைச் சேவையில  தாம் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் கூறினார்.

எனது 38 ஆண்டுகால காவல்துறைப் பணியில் நான் எந்த அரசியல் கட்சியிலும் ஈடுபட்டதில்லை என்று இன்று நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின்  மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சியுடன் தன்னை சம்பந்தப்படுத்தும் விளக்கப்படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட பிழை குறித்து, சம்பந்தப்பட்ட ஊடகம் தன்னைச் சந்திக்க விரும்பியதால் இந்த விஷயம் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக முகமது காலிட் கூறினார்.

எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து தனது தரப்பு ஊடகங்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,  சிறப்பான மற்றும் முழுமையான செய்திகளை வழங்கும் அதேவேளையில்  தெரிவிக்கப்பட வேண்டிய செய்திகளை  வெளியிடும் பொறுப்பிலிருந்து நழுவ வேண்டாம் என்று ஊடகவியலாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

காவல்துறைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு தொடரும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இது காவல்துறைக்கு  மட்டுமல்ல, அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மடாணி அரசாங்கத்திற்கும் சிறந்த தகவல்களை  வழங்குவதற்கான முக்கிய அடித்தளமாகும்  என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.