NATIONAL

முதல் கோவிட்-19 மரணப் பதிவு

20 ஜூன் 2025, 12:24 PM
முதல் கோவிட்-19 மரணப் பதிவு

புத்ராஜெயா, ஜூன் 20 - இவ்வாண்டு மலேசியா தனது முதல் கோவிட்-19 மரணத்தைப் பதிவுச் செய்துள்ளது.

இதில் மரணமடைந்தவர், நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி போடாதவர் ஆவார்.

இது, கடந்தாண்டு மே 26-ஆம் தேதிக்குப் பிறகு நாட்டில் பதிவான முதல் கோவிட்-19 உயிரிழப்பும் ஆகும்.

கடந்தாண்டு முழுவதும் 57 பேர் கோவிட்டால் மரணமடைந்த நிலையில், இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவ்வாண்டு இதுவரையில் 21,738 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.