கோலாலம்பூர், ஜூன் 19 - ஆசியான் அமைப்பில் தீமோர் லெஸ்தே முழு உறுப்பினர் ஆவதை உறுதி செய்வதில் ஆசியான் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் முக்கியத் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கான செயல்முறை சிக்கலானது மற்றும் சுணக்கம் காணக்கூடியது என்பதை ஒப்புக்கொள்வதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தீமோர் லெஸ்தே எதிர்கொள்ளும் கட்டமைப்பு மற்றும் அமைப்பு முறை சவால்களை ஆசியான் தலைவர்கள் அறிந்திருப்பதாக கூறிய அவர், ஆனால் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கான அந்நாட்டின் உறுதிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சொன்னார்.
இது ஒரு கடினமான பாதை. ஏனென்றால் தூண்களை நிறைவேற்றுவது ஒரு சவாலான பணி. மேலும் ஆசியான் தலைவர்கள் தங்கள் நுழைவைப் பாதுகாக்க மட்டுமே முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்கள் தங்களால் இயன்றதைச் செய்வார்கள் என்று அவர் இன்று நடைபெற்ற 38வது ஆசிய-பசிபிக் வட்டமேசை மாநாட்டின் கேள்வி-பதில் அமர்வின் போது கூறினார்.
சட்டம், நிதி மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளில் தயார்நிலை மதிப்பீடுகள் உட்பட முழு உறுப்பினர் சேர்க்கைக்கான தீமோர்-லெஸ்தேவின் தயார்நிலையை எளிதாக்குவதற்கான முயற்சிகளை தீவிரமாக ஒருங்கிணைத்து வரும் ஆசியான் செயலகத்தை அன்வார் பாராட்டினார்.
பொருளாதார ஒருங்கிணைப்பு ஒரு குறிப்பிடத்தக்க தடையாக இருந்தாலும் ஈடுபாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.


