MEDIA STATEMENT

மூதாட்டியின் சடலம் வீட்டில் கண்டுபிடிப்பு- போலீசார் தகவல்

15 ஜூன் 2025, 4:40 PM
மூதாட்டியின் சடலம் வீட்டில் கண்டுபிடிப்பு- போலீசார் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 15-  இங்குள்ள பாண்டன் இண்டாவிலுள்ள  வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை   கண்டு பிடிக்கப்பட்ட  வயதான பெண்ணின் மரணத்தில் குற்றத்தன்மையும் இருப்பது  கண்டுபிடிக்கப்படவில்லை  என்று அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

எழுபத்தாரு  வயதுடைய அந்தப் பெண்ணின் உடல் மீது  நேற்று மாலை கோலாலம்பூர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

பிரேத பரிசோதனையில் எந்த குற்றவியல் கூறுகளும் இல்லை என்று கண்டறியப்பட்டது. மேலும் மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது  என்று அவர் இன்று காலை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஜாலான் பாண்டன் இண்டவில் உள்ள இரண்டு மாடி வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.