NATIONAL

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்- தையல்காரர் மீது குற்றச்சாட்டு

7 ஜூன் 2025, 1:47 PM
மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்- தையல்காரர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன் 7- மாற்றுத் திறனாளிப் பெண்ணை பாலியல் ரீதியாக

துன்புறுத்தியதாக தையல்காரர் ஒருவர் மீது அம்பாங் செஷன்ஸ்

நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி நுருளிஸ்வான் அகமது ஜூபிர் முன்னிலையில் தமக்கு எதிராக

கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை முகமது அரிப் ஜூல்பிகார் அப்துல்

ரசாக் (வயது 25) என்ற ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.

பதினேழு வயதான அந்த மாற்றுத் திறனாளி பெண்ணை கடந்த மே

மாதம் மாலை 6.30 மணியளவில் தாமான் கிராமாட் தொழில்திறன்

பயிற்சி மையத்தில் உள்ள கழிப்பறையில் மானபங்கப் படுத்தியதாக அவர்

மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை

அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் தண்டனைச்

சட்டத்தின் 354வது பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டை

எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை 6,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என நிபந்தனை

விதிக்கவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நோர்ஹிடாயா அப்துல்லா சானி

நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

தனது கட்சிக்காரர் தையல்காரராக வேலை செய்வது வருவதோடு

குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பிலும் உள்ளதால் குறைந்த பட்ச ஜாமீன்

தொகையை நிர்ணயிக்கும்படி அவரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்

லிங்கேஸ்வரன் சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

அரசுத் தரப்பு பரிந்துரைத்த கூடுதல் நிபந்தனைகளோடு 4,000 வெள்ளி

ஜாமீனில் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி

வழக்கு விசாரணையை வரும் ஜூலை மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்தி

வைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.