NATIONAL

500,000 ரிங்கிட்டுக்கும் கீழ் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு e-invoice முறை அமுலாக்கத்திலிருந்து விலக்கு

6 ஜூன் 2025, 11:48 AM
500,000 ரிங்கிட்டுக்கும் கீழ் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு e-invoice முறை அமுலாக்கத்திலிருந்து விலக்கு

புத்ராஜெயா, ஜூன் 6 - ஆண்டுக்கு 500,000 ரிங்கிட்டுக்கும் கீழ் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு e-invoice முறை அமுலாக்கத்திலிருந்து தற்போதைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) அறிவித்துள்ளது.

அதே சமயம் 1 மில்லியன் முதல் 5 மில்லியன் ரிங்கிட் வரையில் வருமானம் பெறும் வர்த்தகங்களுக்கு, அடுத்தாண்டு ஜனவரி 1 வரை இத்திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN அறிவித்துள்ளது.

மேலும், இவ்வேளையில் 1 மில்லியன் வரையில் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் 2026 ஜூலை 1 முதல் இந்த e-invoice முறையை பயன்படுத்தியாக வேண்டும்.

குறு, சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு இருக்கும் மாதாந்திர கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு வருவாய் வாரியம் விளக்கியது.

எனினும், 5 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 25 மில்லியன் ரிங்கிட் வரையில் ஆண்டு வருமானம் பெறும் நிறுவனங்கள், எதிர்வரும் ஜூலை 1 முதல் e-invoice முறையைப் பயன்படுத்தும்.

இக்காலக் கட்டத்தில், e-invoice விதிமுறைகளைப் பின்பற்றும் பட்சத்தில், 1967 வருமான வரி சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் LHDN உத்தரவாதம் அளித்தது.

ஆனால், அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் 10,000 ரிங்கிட்டுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நிறுவனங்கள் கட்டாயம் e-invoice வெளியிட வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.