NATIONAL

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி, 13 பேர் காயம்

2 ஜூன் 2025, 2:13 PM
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி, 13 பேர் காயம்

மச்சாங், ஜூன் 2 —  மச்சாங்-பாசீர் பூத்தே சாலையின்  (பொங்கோல் ஜூடா)  9.4 வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த   மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும்  13 பேர் காயமடைந்தனர்.

நேற்றிரவு 11.45 மணிக்கு நிகழ்ந்த இந்த  விபத்தில் செவ்ரோலெட் ரக நான்கு சக்கர  இயக்க வாகனம், புரோட்டான் வாஜா மற்றும் பெரோடுவா கஞ்சில் ஆகிய வாகனங்கள்  சம்பந்தப்பட்டதாக மச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்  அகமது ஷாபிகி ஹுசேன் தெரிவித்தார்.

மச்சாங்கிலிருந்து பாசீர் பூத்தே நோக்கி  ஐந்து பயணிகளுடன்  சென்ற செவ்ரோலெட்  டிரக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் தடத்தில் நுழைந்து  ஆறு பேரை  ஏற்றிச் சென்ற புரோட்டான் வாஜா காருடன் மீது நேருக்கு நேர் மோதியது  ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மோதலின் விளைவாக புரோட்டான் வாஜா ஓட்டுநர் வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பயணித்த பெரோடுவா கஞ்சில் கார்  புரோட்டான் வாஜாவின் பின்னால்  மோதியது என்று ஷாபிகி கூறினார்.

இவ்விபத்தில் பலியானவரின்  உடல் பிரேத பரிசோதனைக்காக மச்சாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் காயமடைந்த 13 பேர்  சிகிச்சைக்காக மச்சாங் மருத்துவமனை மற்றும் தானா மேரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.