NATIONAL

சிலாங்கூரில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

30 மே 2025, 10:58 AM
சிலாங்கூரில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

பெட்டாலிங் ஜெயா, மே 30 - சிலாங்கூரில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.3 விழுக்காடு குறைந்துள்ளது. இதை மாநிலப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு தலைவர் ஜாமாலியா ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்.

கடந்த மே 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சிலாங்கூரில் 519 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரு மரணச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதற்கு முந்தை வாரம் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 566 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பாக பெட்டாலிங் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது அங்கு மட்டும் 178 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கு அடுத்த நிலையில் 119 டிங்கி காய்ச்சல் சம்பவங்களோடு கிள்ளான் மாவட்டம் உள்ளது.

டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் குறைந்தாலும் பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு ஜமாலியா கேட்டுக் கொண்டார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.