NATIONAL

தாய்லாந்தில் மலேசியர் மரணம்

28 மே 2025, 11:20 AM
தாய்லாந்தில் மலேசியர் மரணம்

யாலா, மே 28 - தாய்லாந்து யாலா மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதி அறையில் மலேசியர் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

அவரின் உடல் திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டதாகப் பெத்தொங் காவல்துறையின் நிலையத்தின் தலைவர் கொல் பொல் ஜக்காரின் லக்சானா தெரிவித்தார்.

இறந்த 67 வயதான அந்த ஆடவர் நெகிரி செம்பிலானை சேர்ந்தவர் என்றும், விடுமுறையைக் கழிக்க அவர் பெத்தொங் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தங்கும் விடுதி ஊழியர்கள் அவரின் உடலை முதலில் கண்டதாக ஐக்காரின் குறிப்பிட்டார்.

இது குறித்து திங்கட்கிழமை காலை மணி 8.30 அளவில் தங்கும் விடுதி ஊழியர்களிடமிருந்து அழைப்பு வந்ததை அடுத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

மேலும், மாரடைப்பினால் அவர் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையின் வழி தெரியவந்துள்ளது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.