NATIONAL

இவ்வாண்டு ஹஜ்ஜூப் பெருநாள் ஜூன் 6ஆம் தேதி கொண்டாடப்படலாம்

26 மே 2025, 2:19 AM
இவ்வாண்டு ஹஜ்ஜூப் பெருநாள் ஜூன் 6ஆம் தேதி கொண்டாடப்படலாம்

அபுடாபி, மே 26 - பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் வரும்  ஜூன் 6ஆம் தேதி  வெள்ளிக்கிழமை ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படலாம்  என்று எதிர்பார்க்கப்படுவதாக அனைத்துலக வானியல் மையம் கூறியது.

ஜுல்ஹிஜ்ஜா 1446எச் இன் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு  வரும் மே 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தெரியும் என எதிர்பார்க்கப்படுவதாக அபுடாபியை தளமாகக் கொண்ட அந்த மையம் கூறியதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மத்திய மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதியிலும் தொலைநோக்கிகள் மூலம் பிறை நிலவைக் காண முடியும் என்று அம்மையத்தின் இயக்குனர் முகமது ஷவ்காட் ஓடே குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் தொலைநோக்கிகள் இல்லாமலேயே பிறை நிலவைப் காண முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் மே 28ஆம் தேதி ஜுல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அய்டில் அல்ஹாட்வின் 10 வது நாளில் அதாவது ஜூன் 6 வெள்ளிக்கிழமை வைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இரு முக்கிய இஸ்லாமிய பண்டிகைகளில் இரண்டாவது பண்டிகையாக ஹஜ்ஜூப் பெருநாள் விளங்குகிறது.

மேலும்  சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனித யாத்திரையுடன் இவ்விழா இணைந்து  கொண்டாடப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.