NATIONAL

யானை குட்டியை மோதிய சாலை விபத்தில் எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லை

14 மே 2025, 3:29 AM
யானை குட்டியை மோதிய சாலை விபத்தில் எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லை

கிரிக், மே 14 - பேராக்கில் கிரிக் நெடுஞ்சாலையில் ஆண் யானை குட்டி ஒன்று டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லை என மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2.30 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்த போது அப்பகுதி பனிமூட்டமாக இருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கிரிக் காவல்துறை தலைவர் சூப்ரிடென்டண்ட் சுல்கிஃப்பிளி மஹ்மூட் கூறினார்.

மேலும், சம்பவ இடத்தில் போதிய விளக்கு ஒளி வெளிச்சமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்று கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் கோழிகளை ஏற்றிச் சென்ற அந்த லாரி திடீரென குறுக்கே ஓடிய யானைக் குட்டியை மோதியுள்ளது. இதனால் லாரியின் அடியில் சிக்கி

யானை பரிதாபமாக உயிரிழந்தது.

குட்டியை இழந்த வேதனையில் தாய் யானை அதே இடத்தில் 5 மணி நேரங்களுக்கும் மேல் நகராமல் நின்றிருந்த வீடியோக்கள் வைரலாகி நாட்டையே உலுக்கின.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.