ANTARABANGSA

இந்தியாவில் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்

13 மே 2025, 4:13 AM
இந்தியாவில் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்

புதுடில்லி, மே 13 — பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறப்பதாக இந்திய அதிகாரிகள் நேற்று அறிவித்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மே 15 அன்று உள்ளூர் நேரப்படி காலை 5.29 மணி வரை பொதுமக்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்கள் இப்போது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய அரசுக்குச் சொந்தமான விமான நிலைய ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே தொடங்கிய இராணுவ மோதலுக்குப் பிறகு, நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள இந்த விமான நிலையங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

— பெர்னாமா-சின்ஹுவா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.