NATIONAL

படகுத் துறையிலிருந்து தவறி விழுந்த இளம் பெண் நீரில் மூழ்கி மரணம்

10 மே 2025, 8:05 AM
படகுத் துறையிலிருந்து தவறி விழுந்த இளம் பெண் நீரில் மூழ்கி மரணம்

ஈப்போ, மே 10- மக்கிய படகுத்துறை தரையிலிருந்து தவறி  விழுந்ததாக நம்பப்படும் பதின்ம வயதுப்  பெண் நீரில் மூழ்கி இறந்தார். இச்சம்பவம் இங்குள்ள கம்போங் பெந்திங் லுவாஸ், சாங்கட் கெருயிங், சுங்கை ராஜா ஹீத்தாம் படகுத்துறையில் நேற்றிரவு  10.00 மணிக்கு நிகழ்ந்தது.

நேற்று இரவு முதல் தேடுதல் மற்றும் மீட்பு  நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்ட நிலையில்  இன்று காலை 7.52 மணிக்கு சாங்காட் கெருயிங் தன்னார்வ தீயணைப்புப் படை உறுப்பினர்கள்  15 வயதான ஷெர்லி ங்கு சியோக் லீயின் உடலைக் கண்டுபிடித்ததாக

பொதுப் பாதுகாப்புப் படை செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின்  மஞ்சோங் மாவட்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

படகுத்துறையிலிருந்து விழுந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தன்னார்வ தீயணைப்பு வீரர்களால் அப்பெண்ணின் உடல்  கண்டுபிடிக்கப்பட்டது.  அவரது உடல் கடற்கரையின் சதுப்புநில சதுப்பு  நிலப்பகுதிக்கு அடித்துச்செல்லப்பட்டது  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்த  சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் மரணத்தை உறுதிப்படுத்தினர். அப்பெண்ணின்  உடல் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.