ANTARABANGSA

போப்பாண்டவர் லியோ நியமனம்- கத்தோலிக்கர்களுக்கு பிரதமர் வாழ்த்து

9 மே 2025, 7:09 AM
போப்பாண்டவர் லியோ நியமனம்- கத்தோலிக்கர்களுக்கு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர், மே 9 -  போப்பாண்டவராகப் போப் லியோ XIV தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உலகம் முழுவதும்  குறிப்பாக மலேசியாவில் உள்ள  கத்தோலிக்கர்களுக்கு  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது எனக் குறிப்பிட்ட  பிரதமர்,  இது புதுப்பிக்கப்பட்ட நோக்கத்திற்கும் உத்வேகத்திற்கும் ஒரு ஆதாரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியா புனித தரிசனத்துடனான அதன் உறவுகளை மதிக்கிறது. மேலும் பரஸ்பர மரியாதை, கலந்துரையாடல், சாந்தம்  மற்றும் மனுக்குல  கண்ணியத்திற்கான எங்கள் பகிரப்பட்ட அர்ப்பணிப்பில் வேரூன்றிய தொடர்ச்சியான ஈடுபாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்  என்று அன்வார் இன்று தனது முகநூல்  பதிவில் தெரிவித்தார்.

சிகாகோவைச் சேர்ந்த 69 வயதான கார்டினல் ரோபர்ட் பிரீவோஸ்ட் வியாழக்கிழமை புதிய போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போப்பாண்டவராக பதவியேற்ற முதல் அமெரிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் போப் லியோ XIV என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 'லியோ' என்ற போப்பாண்டவரின் பெயரின் முதல் பயன்பாட்டைக் குறிக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.