NATIONAL

பராமரிப்பு மையங்களுக்கான சிறப்பு மானியம் அறிமுகம்

7 மே 2025, 4:08 AM
பராமரிப்பு மையங்களுக்கான சிறப்பு மானியம் அறிமுகம்

ஷா ஆலம், மே 7: ஜனவரி முதல் பராமரிப்பு மையங்களுக்கான சிறப்பு மானியத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், சமூக நலத் துறையில் (JKM) சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட அனைத்து பராமரிப்பு மையங்களையும் மாநில அரசு இலக்காகக் கொண்டுள்ளது.

இன்றுவரை, நர்சரிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு மையங்கள் (OKU) உட்பட மொத்தம் 330 பராமரிப்பு மைய நிர்வாகிகள் அதிகபட்சமாக RM5,000 சிறப்பு மானியத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக சமூக நல ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

"இதுவரை, பகல்நேர பராமரிப்பு நிறுவனங்களிடமிருந்து வந்த பல விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சில முழுமையற்ற ஆவணங்கள் காரணமாக அங்கீகரிக்கப்படவில்லை.

"குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் போன்ற குழுவினர் தரமான மற்றும் பாதுகாப்பான பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த மானியத்தை அறிமுகப்படுத்தியதாக அன்பால் சாரி மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், பதிவு செய்யப்படாத பகல்நேர பராமரிப்பு மையங்களின் உரிமையாளர்கள் சமூக நலத் துறையில் பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக மாநில நிர்வாகம் ஒரு சிறப்பு மானியத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அன்பால் அறிவித்தார்.

அனைத்து பகல்நேர பராமரிப்பு மையங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் சட்டத்திற்கு இணங்குவதையும் உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக RM400,000 ஒதுக்கீட்டில் மாநில அரசின் இந்த திட்டம் இருப்பதாக அன்பால் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.