NATIONAL

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையிடம் வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை காணவில்லை

5 மே 2025, 5:51 AM
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையிடம் வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை காணவில்லை

கோலாலம்பூர், மே 5 - ஏப்ரல் 9ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையிடம் வாக்குமூலம் அளிக்கச் செல்லும் வழியில், பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணியிலிருந்து அவரைக் காணவில்லை என புகார் கிடைத்திருப்பதை, கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா உறுதிப்படுத்தினார்.

ஏற்கனவே சில முறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையிடம் வாக்குமூலம் அளித்துள்ள 42 வயதான அப்பெண், ஏப்ரல் 9-ஆம் தேதி வராவில்லை என எம்ஏசிசி உறுதிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, எம்ஏசிசி அதிகாரிகள், காணாமல் போன பெண்ணின் வழக்கறிஞர் உள்ளிட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் துணையோடு அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக டத்தோ ருஸ்டி கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.