MEDIA STATEMENT

நீராவி கொதிகலன் வெடித்ததில் நான்கு பனை எண்ணெய் ஆலை தொழிலாளர்களுக்கு தீ காயங்கள்.

3 மே 2025, 11:58 AM
நீராவி கொதிகலன் வெடித்ததில் நான்கு பனை எண்ணெய் ஆலை தொழிலாளர்களுக்கு தீ காயங்கள்.

ஷா ஆலம், மே 3:கோலா சிலாங்கூரில் உள்ள பெஸ்தாரி ஜெயாவில் உள்ள பனை எண்ணெய் ஆலையில் உள்ள நீராவி கொதிகலன் இயந்திரம் இன்று காலை வெடித்ததில் நான்கு தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளானர்கள்.

பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து பணியாளர்களை அனுப்புவதற்கு முன்பு காலை 8:55 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தனது குழுவுக்கு அழைப்பு வந்ததாக அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு உள்ளூர் குடிமகன், ஒரு பங்களாதேஷ் மற்றும் இரண்டு நேபாளிகள் உட்பட, 27 முதல் 38 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் காயமடைந்தனர்.

"தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த  கொதிகலன் இயங்திரம் வெடிப்பதற்கு முன்பு  தொழிலாளர்கள் தொழிற்சாலை செயல்பாடுகளுக்காக இயந்திரத்தில் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருந்ததாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக தங்கள் சொந்த வாகனங்களில் தஞ்சோங் கராங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்றார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.