MEDIA STATEMENT

பணிச் சூழல் வளர்ச்சியின்  தூணாக அரசாங்கம் விளங்குகிறது- மந்திரி புசார்

1 மே 2025, 4:55 AM
பணிச் சூழல் வளர்ச்சியின்  தூணாக அரசாங்கம் விளங்குகிறது- மந்திரி புசார்

ஷா ஆலம், மே 1- தொழில் மற்றும் செல்வ வளத்தை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்று  மந்திரி புசார் கூறினார்.

இலக்கவியல்   துறை உட்பட பல்வேறு தரமான முதலீடுகளின் வருகை தரமான  வேலை வாய்ப்பு மற்றும் உயர்  வருமானத்திற்கு   உத்தரவாதம் அளிக்கிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தொழிலாளர் தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொண்ட அமிருடின், விரிவடைந்து வரும் இலக்கவியல்  சகாப்தத்தில்  புதுமைகளை உருவாக்கவும் வாழ்க்கையை வழிநடத்தவும் மனித மூலதனத்திற்கு தொடர்ந்து ஆக்கத்திறன்  அளிக்கப்படும் என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர்கள். வியாபாரிகள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர் மற்றும் வேலை செய்யும் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் என்று அவர் இன்று முகநூல் பதிவில்  தெரிவித்தார்.

புக்கிட் ஜாலில்,  அக்ஸியாத்தா அரங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தலைமை தாங்கி நடத்தும் 2025 தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெக்கெர்ஜா கெசுமா பங்சா' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு தொழிலாளர் தினக் கொண்டாட்டம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாகவும், நிலைத்தன்மை, நீதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அபிலாஷைகளை முக்கியமாக செயல்படுத்துவதில்   முக்கிய பங்கை ஆற்றும் தொழிலாளர்களை அங்கீகரிப்பதை இந்நிகழ்வு நோக்கமாக கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.