NATIONAL

கார் தடம் புரண்டதால் சிறுமி மரணம்

23 ஏப்ரல் 2025, 9:12 AM
கார் தடம் புரண்டதால் சிறுமி மரணம்

ஜோகூர் பாரு, ஏப்ரல் 23: நேற்று நள்ளிரவு, தாமான் அடா ஹைட்ஸில் உள்ள ஜாலான் அடா 5 இல் இருந்து கார் தடம் புரண்டதால் சிறுமி ஒருவர் மரணம் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில், மூன்று நபர்கள் பயணம் செய்த பெரோடுவா மைவி, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தோளில் தடம் புரண்டதாக நம்பப்படுகிறது.

இச்சம்பவ இடத்திற்கு விரைந்த பணியாளர்கள் குழு, விபத்தில் சிக்கிய மூன்று பேரைக் கண்டுபிடித்தனர் என தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தலைவர், மூத்த தீயணைப்பு அதிகாரி II இஸ்வான் அப்துல்லா கூறினார்.

"அதில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் காயமடைந்தார். அவர்கள் காரின் முன்பக்கத்தில் சிக்கிக்கொண்டனர்."

"வாகனத்தில் இருந்த சிறுமி ஒருவர் சுகாதார அமைச்சக (MOH) பணியாளர்களால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது," என்று அவர் கூறியதாகப் பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.

காயமடைந்த இரண்டு பேருக்கும் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு (HSI) அனுப்பப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சிறுமியின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.