பாலிங், ஏப்ரல் 17 - கடந்த நோன்புப் பெருநாள் இரண்டாவது நாள் அன்று 5 பேரைக் கடிக்கும் அளவுக்கு தனது `Rottweiler` நாயைக் கட்டுப்படுத்தாமல் கவனக்குறைவாக இருந்ததற்காக, அதன் உரிமையாளருக்கு (சோங் சென் சோங்), 8,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
60 வயதான அந்த உரிமையாளர் தம் மீதான 5 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, பாலிங் மஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 1,700 ரிங்கிட் அபராதம் என்ற வகையில் மொத்தமாக 8,500 ரிங்கிட் விதிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், குறிபிட்ட அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 2 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனும் நீதிபதி அறிவித்தார்.
இச்சம்பவத்தன்று இன்னொரு `Rottweiler` நாயுடன் சேர்ந்துகொண்டு இந்த நாய் ஐவரைக் கடித்து காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


