NATIONAL

மலேசியாவுக்கான  வருகை புதிய அத்தியாயத்தை திறக்கும் -  சீன அதிபர் நம்பிக்கை

16 ஏப்ரல் 2025, 1:26 AM
மலேசியாவுக்கான  வருகை புதிய அத்தியாயத்தை திறக்கும் -  சீன அதிபர் நம்பிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - சீனா மற்றும் மலேசியாவின் கூட்டு முயற்சிகளின் வழி  மலேசியாவுக்கான தனது வருகை ஊக்கமளிக்கும் பலன்களைத் தரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வருகை  இருதரப்பு உறவுகளில் "50 ஆண்டு பொற்காலத்தின்" புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றும்  அவர் கூறியதாக  சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

தமது இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு-அண்டை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று நம்புவதாக அதிபர் ஜி கோலாலம்பூர் அனைத்துலகக  விமான நிலையம் வந்தடைந்ததும் வெளியிட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.