NATIONAL

துன் அப்துல்லாவின் நல்லுடல் நல்லடக்க சடங்கிற்காக தேசிய பள்ளிவாசல் கொண்டு வரப்பட்டது

15 ஏப்ரல் 2025, 2:45 AM
துன் அப்துல்லாவின் நல்லுடல் நல்லடக்க சடங்கிற்காக தேசிய பள்ளிவாசல் கொண்டு வரப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல் 15 - இங்குள்ள மாவீரர் மையத்துக் கொல்லையில் அரசாங்க மரியாதையுடன்  அடக்கம் செய்வதற்காக நாட்டின்  ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் நல்லுடல்

இன்று காலை 8.15 மணிக்கு தேசிய பள்ளிவாசலுக்கு  கொண்டுவரப்பட்டது.

முன்னாள் பிரதமரின் நல்லுடலை ஏற்றிச் சென்ற வேன் பெர்சியாரான் துவாங்கு ஜாபர்,  பைட் படாவியில் உள்ள மறைந்த பிரதமரின் இல்லத்திலிருந்து தேசிய பள்ளிவாசல்  வளாகம் வந்து சேர்ந்தது.

மறைந்த துன் அப்துல்லாவுக்கு   பொதுமக்கள் இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தேசிய பள்ளிவாசலின் பிரதான பிரார்த்தனை மண்டபத்தில் இறுதி அஞ்சலி செலுத்தலாம்.

பின்னர் நண்பகலுக்குப் பிறகு அன்னாரின்  உடல் நல்லடக்கச் சடங்கிற்காக  மாவீரர் மையத்துக் கொல்லைக்கு கொண்டுச் செல்லப்படும்.

அப்துல்லா நேற்றிரவு 7.10 மணிக்கு தேசிய இதய சிகிச்சைக் கழகத்தில் (ஐ.ஜே.என.) தனது 85வது வயதில் காலமானார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.