NATIONAL

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட போலீஸ் அதிகாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

9 ஏப்ரல் 2025, 1:25 AM
தன்னைத்தானே சுட்டுக் கொண்ட போலீஸ் அதிகாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

ஜோர்ஜ் டவுன், ஏப். 9 - பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில்

(ஐபிகே) பணியாற்றும்  காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.  இச்சம்பவம் பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நேற்று நிகழ்ந்தது.

இச்சமாபவத்தில் படுகாயமடைந்த ஐம்பத்தெட்டு வயதான அந்த கார்ப்ரல்  சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது  தொடர்பு பெரானாமாவிடம்  இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். இதன் தொடர்பில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

இந்த  சம்பவம்  தொடர்பான விசாரணை இன்னும் தொடக்கக் கட்டத்தில் உள்ளது. இது குறித்து விரைவில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்  என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.