NATIONAL

வார இறுதியில 20 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்

3 ஏப்ரல் 2025, 8:54 AM
வார இறுதியில 20 லட்சம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்

கோலாலம்பூர், ஏப். 3 - நோன்புப் பெருநாள் விடுமுறைக்குப் பிறகு மக்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு திரும்புவதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தினசரி 20 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்  என்று பிளஸ் மலேசியா பெர்ஹாட் எதிர்பார்க்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் 4,  5 மற்றும்  6 ஆகிய தேதிகளை திரும்பும் பயணத்திற்கான உச்ச பயண நாட்களாக அது அடையாளம் கண்டுள்ளது.

நெரிசலைக் குறைப்பதற்கு ஏதுவாக பிளஸ் செயலியில் உள்ள  MyPLUS-TTA  இலக்கவியல் பயண அட்டவணையைப் பயன்படுத்தி  தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு  வாகனமோட்டிகளை பிளஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

வாகனமோட்டிகள்  தங்கள்  பயணத்தை மிகவும் திறமையாக திட்டமிட  MyPLUS-TTA டிஜிட்டல் அட்டவணை பெரிதும் உதவுகிறது. சீரான போக்குவரத்தையும் அனைவருக்கும் மிகவும் வசதியான பயணத்தையும் இது  உறுதி செய்கிறது என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

கூடுதல் ஊக்குவிப்பாக,  பிளஸ்  செயலியில் உள்ள 'Follow MyPLUS-TTA for Hari Raya Aidilfitri' எனும் பிரச்சாரத்தின் மூலம் MyPLUS-TTA அட்டவணையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு 20,000 வெள்ளி வரையிலான மதிப்புள்ள பரிசுகளையும் பிளஸ் நிறுவனம் வழங்குகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.