ANTARABANGSA

நிலநடுக்கத்தை அடுத்து மியான்மாருக்கு சிலாங்கூர் உதவி நீட்டிப்பு

30 மார்ச் 2025, 4:48 AM
நிலநடுக்கத்தை அடுத்து மியான்மாருக்கு சிலாங்கூர் உதவி நீட்டிப்பு

கோலாலம்பூர், மார்ச் 30 - மியான்மாரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு மனிதாபிமான மற்றும் பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்கு உதவிட மாநில அரசு தயாராக உள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் கீழ் சிலாங்கூர் அதன் அவசர கால பங்களிப்பு குழுவை (பந்தாஸ்) நிறுவியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"எங்களிடம் பாந்தாஸ் அணி உள்ளது, ஆனால் அது தூய்மைப்படுத்தும் பணிக்கு அதிகம்  உதவும், தேவைப்பட்டால் (மியான்மருக்கு ஒரு உதவிக் குழுவை அனுப்ப) நாங்கள் விஸ்மா புத்ராவைத் தொடர்புகொள்வோம்.

"எங்களிடம் உள்ள தன்னார்வலர்களின் உதவி தேவைப்பட்டால், அவர்கள்  எங்களைத் தொடர்பு கொள்ளலாம், ஆனால் பூகம்பம் போன்ற பேரழிவுகளில்  உதவ  நிபுணத்துவம் தேவை.

" மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (SMART) மற்றும் இராணுவம் இந்தத் துறையில் நிபுணர்களாக உள்ளனர்" என்று அவர் நேற்று இங்குள்ள தாமான் கிராமாட்டில் சந்தித்தபோது கூறினார்.

மனிதாபிமான மற்றும் பேரிடர் மேலாண்மை உதவிக்காக தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் கீழ் ஒரு குழுவை மியான்மாருக்கு மலேசியா அனுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய மியான்மார், வடக்கு தாய்லாந்து மற்றும் தெற்கு சீனாவில் வியாழக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏற்பட்ட பெரிய அளவிலான அழிவு குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஆசியான் தலைவராக இருந்த அன்வார், அண்டை நாடுகளுடன் மலேசியாவின் ஒற்றுமை வலியுறுத்தினார், மேலும் உதவி மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கான நாட்டின் தயார் நிலையையும் குறிப்பிட்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.