MEDIA STATEMENT

திறமையான வானிலை முன்னறிவிப்புகள் வழி பேரிடர் அபாயங்களை தணிக்க முடியும்- ஜாஹிட்

23 மார்ச் 2025, 8:48 AM
திறமையான வானிலை முன்னறிவிப்புகள் வழி பேரிடர் அபாயங்களை தணிக்க முடியும்- ஜாஹிட்

கோலாலம்பூர், மார்ச் 23 - பேரிடர் அபாயங்களைக் குறைப்பதில் திறமையான முன்னறிவிப்பு முறையும் வானிலை மாற்றங்களுக்கு விரைவான பதிலளிக்கும் முறையும்  மிக முக்கியமானவை என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் வானிலை தொடர்பான தகவல்களை வழங்குவதில் முழுமையான  அர்ப்பணிப்புடன் செயல்படும் வானிலை ஆய்வுத் துறைக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நீங்கள் நாட்டின் 'வானிலை முன்னோடிகள்', எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள நாடு  தயாராக இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்.

இந்த முயற்சிகள் தொடர்ந்து பாராட்டப்படும். மேலும் அன்றாட வாழ்வில் வானிலை புதுப்பிப்புகளின் முக்கிய பங்கு குறித்து பொதுமக்களுக்கு மேலும் கற்றுக் கொடுங்கள். வானிலை வீரர்களே, சிறந்த பணியைத் தொடருங்கள் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இன்று அனுசரிக்கப்படும்  2025 ஆம் ஆண்டு உலக வானிலை தினத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான ஜாஹிட்

தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் கருப்பொருள் 'முன்னெச்சரிக்கை   இடைவெளியை ஒன்றிணைந்து குறைப்போம்'  என்பதாகும். சரியான நேரத்தில் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் உயிர்களைக் காப்பாற்றும் என்பதை இது நினைவூட்டுகிறது  என்று அவர் கூறினார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.