NATIONAL

இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பெர்லி தான்-தீனா ஜோடி முன்னேறியுள்ளனர்

14 மார்ச் 2025, 8:32 AM
இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பெர்லி தான்-தீனா ஜோடி முன்னேறியுள்ளனர்

பர்மிங்ஹம், மார்ச் 14 - அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு தேசியப் பூப்பந்து மகளிர் அணி பெர்லி தான்-தீனா, இந்தோனேசியாவின் அம்ரியானி ரஹாயு - சித்தி படியா சில்வா ஜோடியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்

இந்தோனேசியா அணியை 21-16, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வெறும் நாற்பதே நிமிடங்களில் தோற்கடித்து அவர்கள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பர்மிங்ஹமில் காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது மலேசிய இரட்டையராக பெர்லி-தீனா திகழ்கின்றனர்.

இந்த ஆட்டத்தின் இரண்டாவது செட்டில் 13-7 என மலேசியா முன்னணியில் இருந்த போது தீனாவுக்கு காயம் ஏற்பட்டதால், இந்தோனேசிய ஜோடி வெற்றி பெறும் வாய்ப்பிருந்தது.

ஆனால், ஆட்டத்தை சமாளித்து வெற்றியுடன் முடிப்பதை அவர் உறுதிச் செய்தார்.

உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்திலுள்ள பெர்லி தான்-தீனா ஜோடி, 29-ஆவது இடத்திலிருக்கும் அந்த இந்தோனேசிய ஜோடியை வீழ்த்துவது, 6 ஆட்டங்களில் இது நான்காவது முறையாகும்.

பெர்லி தான்-தீனா இருவரும் காலிறுதி ஆட்டத்தில், கடந்தாண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தங்களைத் தோற்கடித்த ஜப்பானின் இணையைச் சந்திப்பர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.