சியோல், மார்ச் 7 - தென் கொரிய போர் விமானங்கள் நேற்று பொதுமக்கள் பகுதியில் தற்செயலாக குண்டுகளை வீசியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 பேராக உயர்ந்துள்ளது. பலியானோரில் 15 பொதுமக்கள் மற்றும் 14 வீரர்களும் அடங்குவர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்தது.
போச்சியோனில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் பயிற்சியின் போது வீடுகள் மற்றும் ஒரு தேவாலயம் தாக்கப்பட்டதாக விமானப்படை மற்றும் தீயணைப்பு நிறுவனம் கூறியது.
இந்த போச்சியோன் பகுதி சியோலில் இருந்து வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் வட கொரியாவுடனான கடுமையாக இராணுவ மயமாக்கப்பட்ட எல்லைக்கு அருகில் உள்ளது.
திடீரென்று போர் விமானத்தின் பலத்த சத்தமும் அதனைத் தொடர்ந்து வெடிப்பு சத்தம் கேட்டதாக என்று 65 வயதான ஓ மௌங்-சு என்ற முதியவர் கூறினார்.


