கோலாலம்பூர், மார்ச் 6 - உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து ஒரு கூட்டுப் பணிக்குழுவை (JWG) நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
இன்று தனது முகநூல் பதிவின் மூலம், மலேசியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேனியல் ஹெய்னெக்கிடமிருந்து நாடாளுமன்றத்தில் மரியாதை நிமித்தமாக ஒரு சந்திப்பைப் பெற்றபோது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாகக் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
“தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) உட்பட மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு (HEIs) இடையே மேற்கொள்ளக்கூடிய பல்வேறு ஒத்துழைப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
“கடந்த ஆண்டு உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானதைத் தொடர்ந்து, உயர்கல்வி, திறன்கள் மற்றும் திவேட் போன்ற பிற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை இந்தச் சந்திப்பு உருவாக்கும் என்று நம்பப்படுகிறது,” என அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா உயர்கல்வி துறையில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருப்பதால், உயர்கல்வி அமைச்சகத்தின் (KPT) திட்டங்களில் அந்நாடு நேரடியாக ஈடுபட வேண்டும் என்று மலேசியாவும் முன்மொழிந்துள்ளதாக சாம்ப்ரி கூறினார்.
இந்தத் திட்டங்களில் `FOI`, பெண்கள் திறன் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டங்கள், கொழும்புத் திட்டத்தின் கீழ் மாணவர் நிதியுதவி ஆகியவையும் அடங்கும்.
— பெர்னாமா


