ANTARABANGSA

பாலஸ்தீனர்களின் கட்டாய வெளியேற்றத்தை ஓ.ஐ.சி. மாநாட்டில் மலேசியா கடுமையாக எதிர்க்கும்

6 மார்ச் 2025, 8:45 AM
பாலஸ்தீனர்களின் கட்டாய வெளியேற்றத்தை ஓ.ஐ.சி. மாநாட்டில் மலேசியா கடுமையாக எதிர்க்கும்

புத்ராஜெயா, மார்ச் 6 - இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தின் (ஓ.ஐ.சி.) வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான அவசரக் கூட்டத்தின் போது ​​காஸாவை இணைப்பது அல்லது பாலஸ்தீனர்களை எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு வலுக்கட்டாயமாக மாற்றுவது ஆகிய முயற்சிகளுக்கு மலேசியா தனது  கடுமையான எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்தும்.

எதிர்வரும்  மார்ச் 7 ஆம் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான்  மலேசியாவின்  இந்த நிலைப்பாட்டை எடுத்துரைப்பார்  என்று வெளியுறவு அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் கூறியது.

இந்த கூட்டத்தில் காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான மேம்பாடுகள்  மற்றும் பாலஸ்தீனர்களை தங்கள் தாயகத்திலிருந்து கட்டாயமாக இடம்பெயர்வதற்கு வழிவகுக்கும் காஸாவை இணைப்பு குறித்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இது தவிர, அனைத்துலக   மற்றும் பிராந்திய அமைப்புகளுடன்  ஒத்துழைப்பை ஏற்படுத்துவது உள்பட காஸாவில் மறுகட்டமைப்பு மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதில் மலேசியாவின் முழு கடப்பாட்டையும் முகமது ஹசான் வெளிப்படுத்துவார்.

கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு, 1967 ஆம் ஆண்டுக்கு  முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவுவதில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில் மலேசியாவின் உறுதியான உறுதிப்பாட்டை இந்த அவசரக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சரின் பங்கேற்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.