NATIONAL

மீனவர் நலன்களைப் பாதுகாக்க உயர் அளவிலான செயற்குழு உருவாக்கப்படும்

6 மார்ச் 2025, 5:54 AM
மீனவர் நலன்களைப் பாதுகாக்க உயர் அளவிலான செயற்குழு உருவாக்கப்படும்

பாகான் டத்தோ, மார்ச் 6 - நாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாளவும் அவர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கவும் `HLC` எனும் உயர் அளவிலான செயற்குழு ஒன்று உருவாக்கப்படவிருக்கின்றது.

அச்செயற்குழு, இதர ஐந்து அமைச்சுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று அதனை தலைமையேற்கும் துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு, நிதி அமைச்சு, உள்துறை அமைச்சு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு அமைச்சர் மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ள அமைச்சுகளாகும் என்று சாஹிட் ஹமிடி கூறினார்.

HLC தொடங்குவதற்கான பரிந்துரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பேராக், பாகான் டத்தோவில், மேற்கு கடற்கரை மண்டல மீனவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.