NATIONAL

இல்லாத கடனுதவித் திட்ட மோசடி- வங்கி துணை நிர்வாகி வெ.28,000 இழந்தார்

3 மார்ச் 2025, 6:11 AM
இல்லாத கடனுதவித் திட்ட மோசடி- வங்கி துணை நிர்வாகி வெ.28,000 இழந்தார்

ஜெம்போல், மார்ச். 3 - இல்லாத கடனுதவித் திட்டத்தை நம்பி இங்குள்ள

வங்கின் ஒன்றின் துணை நிர்வாகி 28,000 வெள்ளியை மோசடிக்

கும்பலிடம் பறிகொடுத்தார்.

ஐம்பத்தைந்து வயதுடைய அந்த துணை நிர்வாகி 30,000 வெள்ளியைக்

கடனாகப் பெறுவதற்கு வாட்ஸ்ஆப் மூலம் முகவர் ஒருவரைத் தொடர்பு

கொண்டதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்

ஹூ சாங் ஹூக் கூறினார்.

கடன் விண்ணப்பம் மூன்றே நாட்களில் பரிசீலிக்கப்பட்டு விடும் என்றும்

அந்த விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கான கட்டணமாக 460 வெள்ளியை

செலுத்தும்படியும் அந்த துணை நிர்வாகி கேட்டுக் கொள்ளப்பட்டதாக

அவர் தெரிவித்தார்.

அந்த ஆடவரும் அந்த 460 வெள்ளித் தொகையை இணைய பரிவர்த்தனை

வாயிலாக சந்தேக நபருக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னர் சந்தேகப்

பேர்வழியின் கோரிக்கையை ஏற்று அந்நபர் 28,112 வெள்ளி வரை

பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.

சந்தேகப் பேர்ழி மேலும் 6,000 வெள்ளியைக் கோரியதைத் தொடர்ந்து

சந்தேகமடைந்த அந்நபர் இது குறித்து போலீசில் புகார் செய்தார் என்றார்

அவர்.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது

பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.