NATIONAL

நாட்டில் 40 இடங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன

25 பிப்ரவரி 2025, 8:39 AM
நாட்டில் 40 இடங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன

கோலாலம்பூர், பிப் 25 – கடந்த டிசம்பர் வரை, நாடு முழுவதும் 40 இடங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாண்டு கூச்சிங்கில் 2 இடங்கள் உட்பட சரவாக்கில் 6 இடங்களில் அக் கருவிகளைப் பொருத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் மக்களவையில்  தெரிவித்தார்.

அக்கருவிகள், இயக்க உணரிகள், மழைமானிகள், சிசிடிவி கேமராக்கள், மற்றும் அபாய ஒலியைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் புவிசார் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச வர்த்தகத்தின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப புரட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தின் குறிப்பிடத்தக்க சவால்கள் போன்றவற்றை எதிர்கொள்ள மலேசியா அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் (STI) போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டும் என்று துணை அமைச்சர் டத்தோ முகமட் யூசுப் அப்டல் கூறினார்.

"தற்போது, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் ஏஜென்சிகள் முழுவதும் STI தொடர்பான செயல்பாடுகள் வழிநடத்த மற்றும் ஒருங்கிணைக்க, குறிப்பிட்ட தேசிய அளவிலான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை," என்று MOSTI க்கான பிரேரணை மீதான விவாதத்தை முடிக்கும் போது அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.