NATIONAL

ஆசியானின் 11வது உறுப்பு நாடாக தீமோர்-லெஸ்தே அக்டோபர் மாதம் இணையும்

24 பிப்ரவரி 2025, 8:46 AM
ஆசியானின் 11வது உறுப்பு நாடாக தீமோர்-லெஸ்தே அக்டோபர் மாதம் இணையும்

கோலாலம்பூர், பிப். 24 - எதிர்வரும் அக்டோபர் மாதம்  கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் தீமோர்-லெஸ்தே ஆசியானில் நிரந்தர உறுப்பினராக இணைவதற்கான வாய்ப்புள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தெரிவித்தார்.

ஆசியானின் நிரந்தர உறுப்பினராக தீமோர்-லெஸ்தே இணைவதற்கான  செயல்முறையை விரைவுபடுத்த ஜாகர்த்தாவில் உள்ள ஆசியான் செயலகத்தில் ஒரு சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆசியானின் முழு உறுப்பினர் பதவிக்கான திமோர்-லெஸ்தேவின் தொலை இலக்கை  செயல்படுத்துவதற்கான நடைமுறைக்கு உதவுவதற்கும் பணிகளை எளிதாக்குவதற்கும்  மலேசியா தீமோர்-லெஸ்தே பிரிவுக்கு 200,000  அமெரிக்க டாலரை பங்களிப்பாக வழங்கியதாக முகமது கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி கூறியிருந்தார்.

ஆசியானில் நிரந்தர உறுப்பினராக  ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் தீமோர்-லெஸ்தே இணங்க வேண்டிய 88 சட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றில் 69 பொருளாதார தூண்கள் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.