NATIONAL

எஸ்.பி.எம் சான்றிதழ் இல்லாத ஒப்பந்த கால அதிகாரிகளின் சேவையை நிறுத்தும் உத்தரவை பிறப்பிக்கவில்லை

19 பிப்ரவரி 2025, 7:29 AM
எஸ்.பி.எம் சான்றிதழ் இல்லாத ஒப்பந்த கால அதிகாரிகளின் சேவையை நிறுத்தும் உத்தரவை பிறப்பிக்கவில்லை

கோலாலம்பூர், பிப் 19 – எஸ்.பி.எம் சான்றிதழ் இல்லாத ஒப்பந்த கால அதிகாரிகளின் சேவையை நிறுத்தும் உத்தரவை தங்களது தரப்பு பிறப்பிக்கவில்லை என பொதுச் சேவைத்துறை வலியுறுத்தியது.

இந்த ஒப்பந்த நியமனம், நிர்வாகம் சேவைக்கான நடப்பு தேவையின் அடிப்படையில் இருப்பதோடு இரு தரப்புக்களிடையே காணப்பட்ட இணக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளதாகப் பொதுச் சேவைத்துறை தெரிவித்தது.

2024ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தகால அதிகாரிகளில் 2,037 பேர் மட்டுமே எஸ்.பி.எம் சான்றிதழ் இல்லாதவர்களாவர்.

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வரை, பொது சேவை ஊதிய முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.பி.எம் சான்றிதழ் இல்லாத ஒப்பந்த அதிகாரிகளை மீண்டும் நியமிக்க, சேவைத் திட்ட நிபந்தனைகளைத் தளர்த்துவதற்காகப் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 108 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அந்த எண்ணிக்கையில், 83 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன என பொதுச் சேவைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.