NATIONAL

சபா, சரவாக்கில் 1,086 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

12 பிப்ரவரி 2025, 4:29 AM
சபா, சரவாக்கில் 1,086 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், பிப். 12 - இன்று காலை 8.00 மணி நிலவரப்படி  சபா மற்றும் சரவாக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 11 தற்காலிக நிவாரண மையங்களில்  தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 1,086 பேராகப் பதிவாகியுள்ளது.

சரவாக் மாநிலத்தில்  நேற்றிரவு 604 பேராக இருந்த வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 609 ஆக சற்று உயர்வு கண்டுள்ளது.

மாநிலத்தில் ஏழு துயர் துடைப்பு மையங்கள்  செயல்பாட்டில் உள்ளதாக சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு  செயலகம் கூறியது.

முக்காவில் உள்ள  மூன்று நிவாரண மையங்களில்  நேற்று 303 ஆக இருந்த  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 308 பேராக உயர்வு கண்டுள்ளது.

மிரியில் உள்ள இரு மையங்களில்  210 பேரும்  பிந்துலுவிலுள்ள ஒரு மையத்தில்  88 பேரும்  சிபுவிலுள்ள  ஒரு மையத்தில் மூவரும் தங்கியுள்ளனர்.

சபாவில் , நேற்றிரவு 159 குடும்பங்களைச் தேர்ந்த 505 பேர் தங்கியிருந்த நிலையில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி அந்த எண்ணிக்கை 145 குடும்பங்களைச் சேர்ந்த   477 பேராக குறைந்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.