NATIONAL

சபா மற்றும் சரவாக்கில் அபாய நிலையில் தொடர் மழை

7 பிப்ரவரி 2025, 8:49 AM
சபா மற்றும் சரவாக்கில் அபாய நிலையில் தொடர் மழை

கோலாலம்பூர், பிப் 7: இன்று பிற்பகல் தொடங்கி நாளை வரை சபா மற்றும் சரவாக்கில் உள்ள பல பகுதிகளில் அபாய நிலையில் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிபு (சிலாங்காவ்), முக்கா (டாரோ, மாத்து, டலாட்,முக்கா), பிந்துலு மற்றும் மிரி (சுபிஸ், மிரி) ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று அறிக்கையின் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

மேற்குக் கடற்கரை (ரனாவ் மற்றும் கோத்தா பெலுட்), சண்டாகான் (தெலுபிட், கினாபாதாங்கன், பெலூரன் மற்றும் சண்டாகான்) மற்றும் குடாட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சபாவிலும் இதே நிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.