கோலாலம்பூர், ஜனவரி 28, இன்றைய சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் தேசத்தின் நலனுக்காக ஒற்றுமை மற்றும் குடும்ப உணர்வை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான ஒரு புதிய தொடக்க புள்ளியைக் குறிக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்புகிறார்.
"சீன சமூகத்திற்கான மகத்தான பண்டிகையை கொண்டாட்டம் , அதாவது சீனப் புத்தாண்டு, நல்லிணக்கம் வலிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பதை வலியுறுத்தும் கன்பூசியஸ் தத்துவம் மீண்டும் ஒரு முறை நமக்கு நினைவூட்டப்படுகிறது".
தேசிய அளவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில் கலாச்சார மற்றும் பாரம்பரிய பன்முகத்தன்மையைப் பாராட்டும் ஒரு நாகரிக ஒழுங்கின் (அமைப்பு) உணர்தலுடன் ஒத்துப்போகிறது. அனைத்து சீன சமூகங்களுக்கும் கொங் ஹீ பாட் ஜாய் "என்று பிரதமர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சந்திர நாட்காட்டியின் படி, இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு மர பாம்பின் ஆண்டாகும், இது சகோதரத்துவம், வெற்றி மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட புதிய நம்பிக்கைகளை தருகிறது.


