ராவாங், ஜன. 24: எதிர்வரும் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ரவாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் பேசுவார்.
குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிக்க ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை முன்வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுவா வெய் கியாட் கூறினார்.
"ரவாங்கில் மக்களின் பிரதிநிதியாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் குறிக்கோள் வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதும், போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் ஆகும் என்றார்.
ரவாங் மாநில சட்டமன்ற சேவை மையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில்,“2027ல் இப்பிரச்சனைகளை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளேன் என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையில், ராவாங் சுங்கச்சாவடி அருகே வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்க நீர் பிடிப்பு குளம் அமைப்பதற்கான ஒதுக்கீட்டிற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வெய் கியாட் கூறினார்.


