NATIONAL

காற்றில் ஈய அளவு அதிகமாக இருந்ததே லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணம்

21 ஜனவரி 2025, 9:41 AM
காற்றில் ஈய அளவு அதிகமாக இருந்ததே லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணம்

மாஸ்கோ, ஜன 21: காற்றில் ஈய (plumbum) அளவு 100 மடங்கு அதிகமாக இருந்ததே லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணமாகும். அதே நேரத்தில் குளோரின் அளவு 40 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஸ்புட்னிக்/ஆர்ஐஏ நோவோஸ்டி நேற்று நியூயார்க் டைம்ஸை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

ஜனவரி 7 அன்று கலிபோர்னியாவில் பல காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டன. இதில் குறைந்தது 27 பேர் இறந்தனர். பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் பிரபலங்களின் வீடுகள் உட்பட 12,300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன.

அமெரிக்க வானிலை முன்னறிவிப்பு சேவையான AccuWeather இன் மதிப்பீட்டின்படி, காட்டுத்தீயினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பொருளாதார இழப்புகள் US$250 பில்லியன் முதல் US$275 பில்லியன் வரை இருக்கலாம்.

– பெர்னாமா-ஸ்புட்னிக்/ரியா நோவோஸ்டி

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.