NATIONAL

ஆற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் மரணம்

21 ஜனவரி 2025, 2:09 AM
ஆற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் மரணம்

கோத்தா பாரு, ஜன. 21: கம்போங் முஜூர், ஜெலாவுட், பாச்சோக் என்ற இடத்தில் ஆறு வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்தான்.

முகமட் பஷீர் முகமட் அர்மான், காலை 9 மணியளவில் தனது சகோதரருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக பாச்சோக் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் கூறினார்.

“இந்தச் சம்பவத்தைப் பற்றி அறிந்த பாதிக்கப்பட்டவரின் தந்தை முகமது அர்மான் ரெம்லி (39), உடனடியாக தீயணைப்புத் துறையைத் தொடர்பு கொண்டார்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பிற்பகல் 1 மணியளவில் சிறுவனின் சடலத்தை கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

"பாச்சோக் ஹெல்த் கிளினிக்கின் மருத்துவ அதிகாரியால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

அச்சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் குபாங் கெரியனில் உள்ள யுனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.