NATIONAL

வீடுகளில் வெள்ளம் - எஸ்.பி.எம். மாணவர்களை இடம் மாற்ற தீயணைப்புத் துறை உதவி

15 ஜனவரி 2025, 4:57 AM
வீடுகளில் வெள்ளம் - எஸ்.பி.எம். மாணவர்களை இடம் மாற்ற தீயணைப்புத் துறை உதவி

காப்பிட், ஜன. 15 - வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட  மலேசிய சான்றிதழ் தேர்வை  (எஸ்பிஎம்)  எழுதும் மாணவர்களை அவர்கள் வசிக்கும்  நீண்ட வீட்டுக் குடியிருப்பிலிருந்து  பள்ளியின் தங்கும்  விடுதிக்கு மாற்றுவதற்கு சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவியது.

நேற்றிரவு  10.34 மணிக்கு  காப்பிட்-2 தேசிய இடைநிலைப் பள்ளி ஆசிரியரிடமிருந்து தங்களுக்கு  அழைப்பு வந்ததாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பேச்சாளர்   ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  காப்பிட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மீட்புக்  குழு உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

சுங்கை சிபாவ், ஜாலான் புக்கிட் கோரம், காப்பிட்டில் அமைந்துள்ள நீண்ட வீட்டின் வெளியேறும் வழி 1.2 மீட்டருக்கும் அதிக அளவு வெள்ளத்தில் மூழ்கியிருந்தது என்று அந்த அறிக்கை கூறியது.

காப்பிட் மாவட்ட  பேரிடர் மேலாண்மைக் குழு அலுவலகத்திற்குச் சொந்தமான ஃபைபர் ஆப்டிக் படகைப் பயன்படுத்தி தீயணைப்புத் துறையினர் மாணவர்களை நீண்ட வீட்டிலிருந்து பள்ளிக்கு மாற்றினர்.

நீண்ட வீட்டு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் இன்னும் கட்டுக்குள் உள்ளது என அப்பேச்சாளர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.