ANTARABANGSA

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் - பலியானோர் எண்ணிக்கை 46,000 பேராக உயர்வு

10 ஜனவரி 2025, 3:39 AM
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் - பலியானோர் எண்ணிக்கை 46,000 பேராக உயர்வு

காஸா, ஜன. 10 - காஸா பகுதியில் பல குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது.  இத்தாக்குதல்களின் விளைவாக 70 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 104 பேர் காயமடைந்தனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2023ஆம் ஆண்டு   அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படைகளின்  தாக்குதல்  தொடக்கத்திலிருந்து அங்கு  இறந்தவர்களின் எண்ணிக்கை 46,006 பேரை எட்டியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் சிறார்கள் மற்றும் பெண்களாவர். மேலும்  109,378 பேர் இப்போரில்  காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் கூறியது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், மோசமான  இடிபாடுகள் மற்றும் எரிபொருள் மற்றும் கனரக உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகள் மீட்புப் பணிகளைச் செய்ய போராடுவதால்  பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர்  இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.