NATIONAL

எம்ஆர்எஸ்எம் 2025க் கான மாணவர்கள் சேர்க்கை பற்றிய தகவல் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்

9 ஜனவரி 2025, 7:47 AM
எம்ஆர்எஸ்எம் 2025க் கான மாணவர்கள் சேர்க்கை பற்றிய தகவல் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஜன 9: எம்ஆர்எஸ்எம் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பற்றிய தகவல் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.

படிவம் 1 மற்றும் 4 க்கான எம்ஆர்எஸ்எம் மாணவர்கள் சேர்க்கை யுகேகேஎம் தேர்வை அடிப்படையாகக் கொண்டது என்று மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராவ் வாஜ்டி டுசுகி முகநூல் மூலம் தெரிவித்தார்.

"முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான இணைப்பைப் மாரா பகிர்ந்து கொள்ளும்.

"யுகேகேஎம்யின் முடிவுகள் அனைத்து திட்டமிடலையும் எளிதாக்கும் வகையில் முன்னதாகவே அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் அனைத்து கருத்துகளையும் நான் முகநூலில் படித்தேன்," என்றார்.

எம்ஆர்எஸ்எம் 2025இல் படிவம் 1 மற்றும் 4 சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பர் 6 வரை திறக்கப்பட்டன.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.