NATIONAL

உள்நாட்டு வர்த்தக அமைச்சின் சோதனையில் சமையல் எண்ணைய் பதுக்கல் அம்பலம்

9 ஜனவரி 2025, 5:23 AM
உள்நாட்டு வர்த்தக அமைச்சின் சோதனையில் சமையல் எண்ணைய் பதுக்கல் அம்பலம்

ஈப்போ, ஜன. 9- தைப்பிங் கோல குரோவிலுள்ள வர்த்தக வளாகம்

ஒன்றைச் சோதனையிட்ட உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச்

செலவின அமைச்சின் பேராக் மாநில அதிகாரிகள் 140 கிலோ எடை

கொண்ட ஒரு கிலோ சமையல் எண்ணைய் பொட்டலங்களை பறிமுதல்

செய்தனர்.

அந்த விற்பனை வளாகம் சமையல் எண்ணெய் பொட்டலங்களை பதுக்கி

வைத்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விற்பதாக பொதுமக்கள் அளித்த

புகாரின் பேரில் நேற்று காலை 11.50 மணியளவில் இந்த அதிரடிச்

சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் பேராக்

மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் கூறினார்.

இந்த ஓப் சாமார் நடவடிக்கையின் கீழ் அமலாக்க அதிகாரிகள்

வாடிக்கையாளர்கள் போல் அந்த கடைக்குச் சென்று பாக்கெட் சமையல்

எண்ணெய் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். எனினும், எண்ணெய் விற்றுத்

தீர்ந்து விட்டதாக அதன் பணியாளர்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்

என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

கடையின் பணியாளர்கள் அளித்த பதிலில் சந்தேகம் கொண்ட  அதிகாரிகள்

அந்த கடையில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். கடையின்

பொருள்கள் வைக்கும் கிடங்கில் 140 கிலோ எடை கொண்ட ஒரு கிலோ

பாக்கெட் எண்ணைய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அந்தச் சோதனையில்

தெரியவந்தது என்றார் அவர்.

இச்சோதனையில் மொத்தம் 350 வெள்ளி மதிப்பிலான அந்த சமையல்

எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், இந்த பதுக்கல்

நடவடிக்கை தொடர்பில் 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச்

சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.