NATIONAL

ஆசாட் நிர்வாகம் வீழ்ந்தது முதல் 115,000 பேர் சிரியா திரும்பினர்

3 ஜனவரி 2025, 6:11 AM
ஆசாட் நிர்வாகம் வீழ்ந்தது முதல் 115,000 பேர் சிரியா திரும்பினர்

இஸ்தான்புல், டிச. டிச. 3 - ஆசாட் நிர்வாகம் வீழ்ந்தது முதல் 115,000க்கும்

மேற்பட்ட சிரியா நாட்டினர் தாயகம் திரும்பியதாக ஐக்கிய நாடுகள்

சபையின் அகதிகளுக்கான நிறுவனம் (யு.என்.சி.எச்.ஆர்.) கூறியது.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி முதல் அவர்கள் துருக்கி, ஜோர்டான்,

லெபனான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியதாக அந்த

அகதிகள் அமைப்பு அறிக்கை ஒன்றில் கூறியதாக அனாடோலு ஏஜென்சி

செய்தி வெளியிட்டுள்ளது.

உபசரணை நாடுகளால் வெளியிடப்பட்ட பொது அறிக்கைகள்,

சிரியாவிலுள்ள குடிநுழைவுச் சேவையுடனான கலந்துரையாடல் மற்றும்

எல்லையில் ஏஜென்சிகள் மேற்கொண்ட கண்காணிப்பு ஆகியவற்றின்

அடிப்படையில் இந்த தரவுகள் கிடைத்ததாக அது குறிப்பிட்டது.

சிரியாவை 25 ஆண்டுகளாக தனது இரும்புப் பிடியில் வைத்திருந்த பஷார்

ஆசாட், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி எதிர்ப்பு இராணுவம் தலைநகர்

டமாஸ்காசை கைப்பற்றியதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு தப்பியோடினார்.

இதன் வழி கடந்த 1963ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த பாட் கட்சியின்

ஆட்சி அந்நாட்டில் முடிவுக்கு வந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.